திருக்குறள்

192.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது.

திருக்குறள் 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது.

பொருள்:

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

மு.வரததாசனார் உரை:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.